ஸ்ரீ லஷ்மி ஸ்லோகம்

ஸ்ரீ லஷ்மி ஸ்லோகம் நமது வீடுகளில் மகாலஷ்மி கடாட்க்ஷம் பரிபூரணமாக இருக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை கூறி வந்தால் வற்றாத செல்வ வளம் நமது வீடுகளில் நிறையும். அச்வாரூடம் மஹாலக்ஷ்மீம் த்வி நேத்ரஞ்ச சதுர்புஜம் ஸ்வர்ணாங்கீம் ஹரிவல்லாபாம் பீ நஸிம நஸீ சோபிதாம் ! ஸர்வாபரண ஸம்யுக்தாம் துகூலாம்பர தாரிணீம் ஐஸ்வர்யதாம்தாம் ஸ்ரீலக்ஷ்மீம் ஸர்வ ஸொபாக்ய ஸித்தயே இந்த ஸ்லோகத்தை வாசிக்க இயலாதவர்கள், கீழ்க்கண்ட பிரார்த்தனையை பக்தியுடன் தினமும் மூன்று முறை வாசித்தாலே போதுமானது. குதிரையின் மேல் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மியே ! இரண்டு கண்களையும் நான்கு கைகளையும் உடையவளே ! தங்கம் போல் மஞ்சள் நிறமான பிரகாசமான உடலை கொண்டவளே ! செல்வத்தைத் தரும் ஐஸ்வர்யலக்ஷ்மியே ! எங்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் தந்தருள்வாயாக.